Sunday, June 22, 2025
Huisதாயகம்நாளை செம்மணியில் போராட்டம்; சிறீதரன் விடுத்த அழைப்பு..!

நாளை செம்மணியில் போராட்டம்; சிறீதரன் விடுத்த அழைப்பு..!

யாழ்.செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் அம்சங்கள் எந்தவித ஆடைகளுமின்றி அடித்து நொறுக்கப்பட்ட குழந்தைகள் வயது வந்தவர்கள் போன்றோர் உடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் 1995 ஆம் தொடக்கம் 2001 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாண மண்ணில் காணாமல் ஆக்கப்பட்ட பலபெயருடையதாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திலே சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பலரது உடல்களும் குறித்த புதைகுழியிலே உள்ளதாக மக்களுக்கு சந்தேகம் எழுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே மக்களின் சந்தேகத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!