முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மாணிக்கபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் தங்கம் காணப்படுவதாக தெரிவித்து சந்தேகநபர்களால் அகழ்வு மேற்கொள்ளப்பட்டபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் – மீசாலை, கிளிநொச்சி – உருத்திரபுரம், பெரிய பரந்தன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Recent Comments