Saturday, January 24, 2026
Huisதாயகம்யாழ். மாவட்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்.!

யாழ். மாவட்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்.!

யாழ் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலர் உட்பட சில பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெறவுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இதன்படி யாழ்ப்பாணம் மேலதிக மாவட்ட செயலராகக் (காணி) கடமையாற்றிய ஸ்ரீமோகனன் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலாளர் சிவசிறீ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளனர்.நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி. நிவேதிகா அஞ்சல் திணைக்களத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.

வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் மேலதிக மாவட்ட செயலாளராகப் (நிர்வாகம்) பதவி உயர்வு பெறவுள்ளார். இதேவேளை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், பருத்தித்துறை பிரதேச செயலகங்களுக்குப் புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!