யாழில் மருத்துவபீட மாணவன் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவி யாழ் வைத்திய சாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் தவறான தொடர்பைப் பேணுவதை அறிந்த பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல் பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டு மாணவியின் கள்ளக் காதலனான வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் குறித்த விடயம் தொடர்பில் முறையிடவுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக் காலத்தில் இத்தகைய முறை தவறிய உறவுகளால் உயிர்கள் வீணே இழக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments