Sunday, July 6, 2025
Huisதாயகம்நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளை டீசல் லீற்றர் 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மண்ணெண்ணை லீற்றர் 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெற்றோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!