நேற்று முன்தினம் (29) கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று கசிப்பு குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு கசிப்பு குடிக்கச் சென்றுள்ளார். அந்த வீடு பூட்டியிருந்தது.
இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியுள்ளார். இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார்.பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை நேற்றைய தினம் (30) கிணற்றில் சடலமாகக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Recent Comments