Sunday, July 6, 2025
Huisதாயகம்வவுனியா இளைஞனைக் கடத்திச் சென்று தாக்கி பணம் பறித்த காவாலிகள் கைது..!

வவுனியா இளைஞனைக் கடத்திச் சென்று தாக்கி பணம் பறித்த காவாலிகள் கைது..!

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (01.07) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா இளைஞன் (வயது 18) ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளைஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழி நடத்தலில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த டீ சில்வா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க (37358), ஜெயதுங்க (20211), திலீப் (61461), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான உபாலி (60945), ரணில் (81010), தயாளன் ( 91792) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ் விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயது இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!