Saturday, July 5, 2025
Huisதாயகம்மன்னார் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

மன்னார் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு..!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் மன்னார் வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!