Sunday, January 25, 2026
Huisதாயகம்செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகளால் அதிர்ச்சி..!

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகளால் அதிர்ச்சி..!

தற்போது வரை செம்மணியில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (06) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் (04) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.’

இந்தநிலையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்தோடு, அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் (06) ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதிலும் எலும்புகள் காண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!