Sunday, January 25, 2026
Huisதாயகம்மட்டக்களப்பில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நீதவான் விசாரணைகளின் பின்னர், உயிரிழந்த சிறார்களின் உடலங்களை வாழைச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் பதனிடும் வாடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், மூன்று சிறார்களும் வாவிக்குள் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!