உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Recent Comments