வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிப் பயணித்த இளைஞனை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் இன்று(11.07.2025) அப்பகுதியில் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் தாங்கள் வைத்திருந்த தடியை சில்லுக்குள் செருகி முறையற்ற வகையில் நிறுத்த முயன்றுள்ளனர். இதன் போது, இளைஞன் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் அதிகளவான மக்கள் குவிந்துள்ளதோடு மக்கள் கொதி நிலையில் காணப்படும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Recent Comments