வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை வர்த்தக நிலையங்களே இவ்வாறு மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கு காணப்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், ஏலவே பொது அறிவித்தல் வழங்கப்பட்ட போதும் கருத்தில் எடுக்காது சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recent Comments