Friday, January 23, 2026
Huisதாயகம்ரணிலால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை உரிமைகளை மீறியது..!

ரணிலால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அடிப்படை உரிமைகளை மீறியது..!

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு இந்த அவசரகால நிலை பயன்படுத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சிவில் சமூக அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 18, 2022 அன்று விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தமை அரசியலமைப்பு உரிமைகளை மீறியதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது

நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய அமர்வு, 2-1 என்ற விகிதத்தில் மனுதாரர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அவசரகாலச் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறியது என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்டச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!