இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புதிய வரி வீதங்கள் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பல்வேறு நாடுகளுக்கான வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஜனாதிபதி கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 7 நாட்களின் பின்னர் அமுல்படுத்தப்படும் என வௌ்ளை மாளிகை கூறியுள்ளது.
ஏற்கனவே இலங்கை மீது கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி 44 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டது.
குறித்த வரியைத் தளர்த்துவது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அரசாங்கத்ம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்ததுடன் அந்த வரி 30 வீதமாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கைக்கான தீர்வை வரியை 20 வீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் இந்தத் தகவல் இன்று அதிகாலை இலங்கைக்கு கிடைத்தது.
இதற்காக இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கடந்த சில நாட்களாக அமெரிக்காவுடன் நடத்தி வந்ததுடன் இது அதன் பலனாக கிடைத்த வெற்றி என இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டது.
Recent Comments