யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள பிரதேச செயலகம் ஒன்றில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பப் பெண் ஒருவர் தனது மகளை அங்கு கடமையாற்றிய அலுவலர்களுக்கு முன் நையப்புடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குடும்பப் பெண் தனது கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவ்வாறு வாழ்ந்து வந்த போதும் கணவரையும் தனது பிள்ளைகளையும் வெறுப்பேற்றும் வகையில் கணவனின் தொலைபேசிக்கு வட்சப் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனால் கடுப்பான குறித்த குடும்பப் பெண்ணின் மகளான பாடசாலை மாணவி பிரதேச செயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை அங்கு வரவழைத்த உத்தியோகத்தர்கள் மகளின் முன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அக் குடும்பப் பெண் தன்னைப் பற்றி முறையிட்டதற்காக குறித்த அலுவலர்களுக்கு முன் தனது மகளைத் தாக்கியதாகத் தெரிய வருகின்றது.
இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் பொலிசாரிடம் முறையிடாமல் அம் மாணவி மற்றும் குறித்த பெண்ணை அங்கிருந்த அகற்றியதாகவும் இது தொடர்பாக பிரதேச செயலாளர் குறித்த உத்தியோகத்தர்களை பொலிசாரிடம் முறையிட அனுமதிக்கவில்லை என தெரிய வருகின்றது.
குடும்பப் பெண் தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பொலிசாரிடம் முறையிட முடியும் என அவர் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும், இச் சம்பவம் ஆளுநர் அலுவலகம் வரை சென்றுள்ளதாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recent Comments