Wednesday, October 15, 2025
Huisதாயகம்வவுனியாவில் அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளருக்கு தர்ம‍ அடி..!

வவுனியாவில் அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளருக்கு தர்ம‍ அடி..!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அடாத்தாக வீட்டினுள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பின்னர் அவர் கிராமத்தின் பெண்களால் தாக்கப்பட்டு போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்துள்ளார். அவ்வேளை, அக்கம் பக்க பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

அப்போது அந்நபர் கடும் போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!