Friday, January 23, 2026
Huisதாயகம்யாழில் அரசியல்வாதி எனும் போர்வையில் செயற்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கைது..!

யாழில் அரசியல்வாதி எனும் போர்வையில் செயற்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கைது..!

யாழ், சாவகச்சேரி பொலிசார் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளனர். இன்று (11) மதியம் 2 மணியளவில் அறுகுவெளி பகுதியில் கஞ்சாவுடன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

படகில் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட கஞ்சாவை பற்றைக் காட்டுக்குள் மறைத்து வைத்திருந்த போது, பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர்.

126 பொதி கஞ்சாவும் மீட்கப்பட்டது. இவை 200 கிலோ கிராமுக்கும் அதிகமான நிறையுடையதாக இருக்கலாமென கருதப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சாவின் நிறையை கணக்கிட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அரசியல்வாதி எனும் போர்வையில் செயற்பட்ட போதைப் பொருள் வர்த்தகரும் கைதானார். இவர் சமூக செயற்பாட்டாளர் என கூறி வந்ததுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அத்துடன் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தில் இவர் சமூக சேவைகள் என்ற போர்வையில் தன்னை பெரும் கொடை வள்ளல் என காட்டி வந்துள்ளார்.

அதே வேளை இவர் பல அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!