தாயகச் செயலணி என்ற அமைப்பு ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டம், எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பமாகும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Recent Comments