Wednesday, August 13, 2025
Huisதாயகம்இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர பகுதிக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு..!

இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர பகுதிக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரிப்பு..!

பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் குவிந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.

குறிப்பாக சென்னை, கேரளா, கொச்சின், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் போத்தல் வகைகள், வலைகள், பூங்கொத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் கயிறு போன்றவையே அதிகளவாக நாட்டின் கடற்பிராந்தியங்களில் தேங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இருதரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

யுத்த காலம் முதல் இன்றுவரை இலங்கையின் கடற்பகுதியை இந்தியா குப்பைத் தொட்டியாகவே பயன்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!