Friday, January 23, 2026
Huisதாயகம்வெகு விமர்சையாக நடைபெற்ற ஆயிஷா வித்தியாலயத்தின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு..!

வெகு விமர்சையாக நடைபெற்ற ஆயிஷா வித்தியாலயத்தின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு..!

இன்றைய தினம், வவுனியா புதிய சாலம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், மாணவர் கெளரவிப்பும் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதாத் பகீரதி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் 2023, 2024ம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பும், தற்போது தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாணவத் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. முகுந்தன், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் திரு. ஜமீஸ், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பைசல் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!