திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகிய 32 வயது ஆசிரியை ஒருவர் தனது கர்ப்பத்திற்கு காரணமான 23 வயதான யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனை, தன்னைத் திருமணம் செய்யக் கோரி அழுத்தம் கொடுத்த காரணத்தால் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை வவுனியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஆசிரியை ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் தங்கி கல்வி கற்பித்து வந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணம் சென்று வரும் போது யாழ் பல்கலைக் கழக மாணவனுடன் பஸ்சில் நட்பாகியதாகத் தெரிய வருகின்றது. இந்த நட்பு பின்னர் தவறான நட்பாக மாறி ஆசிரியை தற்போது 5 மாத கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியை குறித்த மாணவனை தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.
இது தொடர்பாக குறித்த மாணவனின் பெற்றோரிடமும் ஆசிரியை நியாயம் கேட்டு வந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தன்னைத் திருமணம் செய்யாது விடின் பொலிசாரின் உதவியை நாட போவதாக மாணவனை அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்தே குறித்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிய வருகின்றது.
தற்போது மாணவன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவமானது வடக்குப் பகுதியில் இடம்பெற்றள்ளது.
மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற ஆசிரியை மாணவனுடன் வைத்தியசாலை விடுதியிலும் தனது கணவர் என்று கூறி சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் மாணவனின் உறவுகள் கடும் கோபத்தில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recent Comments