Saturday, January 24, 2026
Huisதாயகம்ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து குறித்து சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலக்சிறி கடந்த வெள்ளிக் கிழமை தனது யூடியூப் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.

இந்தநிலையிலேயே சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் ஆரம்பிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .

நேற்று முன்தினம் (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 20 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதிக் குற்றச்சாட்டிற்கு பொதுவாக பிணை வழங்கப்பட மாட்டாது என்பது பொது அறிவு.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!