Monday, September 15, 2025
Huisதாயகம்அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச

அரசியலில் இருந்து இன்னும் ஓய்வுபெறவில்லை – சமல் ராஜபக்ச

” நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் ” என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” அரசியலுக்குள் வந்து விட்டால் அதனை கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.” எனவும் அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவும் மண் கவ்வினார்.

பல மாதங்களுக்கு பிறகு பொது வெளிக்கு வந்த சமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!