புதுக்குடியிருப்பு – திம்பிலியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (21.09.2025) இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு திம்பிலியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கி (இடியன்) மூன்றினை மறைத்து வைத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவலினையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸாரால் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் அதனை தமது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் திம்பிலி பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.


Recent Comments