வட மாகாண ஆளுநர் தலைமையில் மத்திய அரசின் பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் பங்கு பற்றிய கூட்டத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அவர்கள் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது ரீசேட் அணிந்து கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.
ஏலவே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தொடர்பில் பழிவாங்கல்களில் ஈடுபடுகின்றமை, அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றமை உள்ளிட்ட பல்வேறு முறைபாடுகள் காணப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தினத்தில் சிவசேனை அமைப்பினரால் அமைச்சுக்கு முன்னால் அமைதி வழி ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறிப்பாக தன்னை சந்திக்க வரும் ஆசிரியர்கள் சேலை அணிந்து வராவிட்டால் திருப்பி அனுப்பும் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆடை ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டமை உயரதிகாரிகளை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதா என எண்ணத் தோன்றியுள்ளது.


Recent Comments