Monday, October 27, 2025
Huisதாயகம்முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..!

முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (22) முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் மற்றும் அதிபர் நியமனம் தொடர்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

​வலய மற்றும் மாகாண அதிகாரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபரை நியமிக்கத் தவறியதோடு, வேண்டுமென்றே இந்த நியமனச் செயல்முறையை தாமதப்படுத்தியதாகவும், பின்னர் உத்தியோகபூர்வ நேர்முகத் தேர்வு முடிவுகளுக்கு எதிராக ஒரு ஆசிரியரை அதிபராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் ஆளுநர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆளுநர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டிய மனு, அவ்விடத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!