Tuesday, October 28, 2025
Huisதாயகம்நாட்டில் 7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்..!

நாட்டில் 7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்..!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர்,

வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை அதிபர், ஆசிரியர்களின் கைகளைக் கட்டி மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதையும் துஸ்பிரயோகம் என வகைப்படுத்தி சிறைக்குள் தள்ளும் அரசு இத்தகைய பாலியல் துஸ்பிரயோகங்கள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதற்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!