Tuesday, October 28, 2025
Huisதாயகம்மாணவர்களின் பொழுதுபோக்கை ஊக்குவிக்க ரூ 5,000 நிதி - அமைச்சர் பீமல் யோசனை

மாணவர்களின் பொழுதுபோக்கை ஊக்குவிக்க ரூ 5,000 நிதி – அமைச்சர் பீமல் யோசனை

உயர்தரப் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று முன்மொழிவு ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்ப்பதற்கும், நல்ல இசையைக் கேட்பதற்கும், கடற்கரைகளைப் பார்வையிடுவதற்கும், கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த ஒதுக்கீடு கலாசார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் சபை முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!