சிறுவர்களுக்கான உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட தண்டனைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி இன்று கல்வி அமைச்சுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இதன்போது, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்டத்தை கண்டித்தும், சட்டமியற்றுபவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரித்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த சட்டத்தின் மூலம், அரசாங்கம் பாடசாலை ஒழுக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன், இந்தத் திருத்தம் சிறுவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், மாணவத் தலைவர்களையும் சிறைக்கு அனுப்பும் என அவர்கள் குற்றம் சுமத்தினர்.
இந்த நிலையில் குறித்த திருத்தம், விவாதத்தில் மாத்திரமே உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Recent Comments