Friday, October 10, 2025
Huisதாயகம்மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது - பேராயர் சுட்டிக்காட்டு

மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது – பேராயர் சுட்டிக்காட்டு

சிறுவர்கள் தண்டனை தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் போது, சில மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட திருப்பலியில் பங்கேற்றபோது பேராயர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சிறுவர்கள் தண்டிக்கப்பட்டு சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கல்வியில் அனைத்து மேற்கத்திய சட்டங்களையும் பின்பற்றப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இது சிக்கலை உருவாக்கும், அப்படியென்றால் ஆசிரியர்களும் எப்படி சமாளிப்பார்கள்? ஆசிரியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பாடசாலையில் மாணவர்கள் தவறாக நடந்து கொண்டால், ஆசிரியர் தலைமுடியை அவ்வளவு நீளமாக வளர்க்க வேண்டாம் என்றும் அதை வெட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறலாம்.

அப்படிச் சொன்னால், அந்த மாணவர்களுக்கு பொலிஸ் நிலையம் சென்று என் ஆசிரியர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறலாம். இதைச் சொன்னதற்காக ஆசிரியரைக் கைது செய்யலாம். அது மிகப் பெரிய தவறு.

இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது என்ற அனைத்தும் இலங்கைக்கு ஏற்றதல்ல.

நமது இலங்கையில், நாம் மதிக்க வேண்டிய ஒரு கலாச்சாரம், ஒரு அமைப்பு மற்றும் நெறிமுறைகள் உள்ளன.

எனவே, கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!