வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்ற தீர்மானித்தற்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி M .A.சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு தொடர்பில், இன்று மாலை 2மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் நீதிமன்றில் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது .
இதன் அடிப்படையில் 2025.11.10 ஆந்திகதியன்று விசாரணைக்காக திகதியடப்பட்டுள்ளது.
Recent Comments