Friday, January 23, 2026
Huisதாயகம்மாகாணக் கல்வித்துறையின் அநீதியான செயற்பாடு; போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி ஆசிரியர்கள்..!

மாகாணக் கல்வித்துறையின் அநீதியான செயற்பாடு; போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி ஆசிரியர்கள்..!

2026ஆம் ஆண்டு வடக்கு மாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடம்மாற்றத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.



இதனை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாவட்டத்தில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும் அதிபர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.



இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான நியாயப்பாடுகளை தங்களின் மேலான கவனத்திற்கு முன் வைக்கின்றோம்” எனக் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!