Saturday, January 24, 2026
Huisதாயகம்மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையில் வாழும் 17,000 குழந்தைகள் - ஆனந்த விஜேபால

மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலையில் வாழும் 17,000 குழந்தைகள் – ஆனந்த விஜேபால

மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழும் சுமார் 17,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், யாரையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.



வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) வடமேற்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.



ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!