இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும் ஆண்களும் சமூகத்தில் ஒருவித அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.


Recent Comments