முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட பாடசாலையுடன் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரான ஆசிரியர் நேற்றைய தினம்(05) நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்த வகையில் விசாரணைகளின் முடிவில் அவர் நேற்றைய தினம் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.


Recent Comments