தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொலொன்ன பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
இன்று (06) காலை 10.00 மணியளவில், கொலொன்ன பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, அதன் தலைவர் சம்பத் குணசிங்கவின் தலைமையில் ஆரம்பமானது.
கொலொன்ன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் 10 ஆசனங்களையும் வென்றதன் மூலம் எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைத்த போதிலும், தலைவர் தெரிவுக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று கொலொன்ன பிரதேச சபையில் ஆட்சியை அமைத்தது.
எவ்வாறாயினும், முதலாவது வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக் குழுக்கள் வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
கொலொன்ன பிரதேச சபை, தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 5 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் சர்வஜன பலய கட்சியின் ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளது.


Recent Comments