Friday, January 23, 2026
Huisதாயகம்போதைப் பொருளுடன் கைதான அதிபர் பணி நீக்கம்; விசாரணைகள் தீவிரம்..!

போதைப் பொருளுடன் கைதான அதிபர் பணி நீக்கம்; விசாரணைகள் தீவிரம்..!

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, தாபன விதிக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அநுராதபுரம்- எப்பாவல பகுதியில் போதைப்பொருள் கடத்தலை, பேலியகொட நகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினரின் மகனும், தெற்கு பாதாள உலகக் கும்பல் தலைவருமான கொஸ்கொட சுஜியின் உறவினருமான மகன் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


இது தொடர்பாக களனியில் உள்ள நகரசபை உறுப்பினரின் வீட்டை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதுடன் இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எதிர்வரும் சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சிலவருடங்களின் முன்னர் வடக்கின் அதிகாரிகள் சிலர் கடமை நேரத்தில் இரத்மலானை விடுதியில் நச்சுப் பதார்த்தங்களை பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட போதும் வடக்கின் உயரதிகாரிகளால் போதிய சாட்சிகள் இல்லை என விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன் குறித்த விருந்தினை வைத்தவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்பதும் ஒழுக்காற்று விசாரணைகள் வடக்கின் உயர் அதிகாரிகளுக்கு பொருந்தாதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!