வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக Telegram, WhatsApp, பேஸ்புக் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி இலவசங்கள் வழங்குவதாக அவர்களது வங்கிக் கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல், தொலைபேசி இலக்கங்கள், மின் அஞ்சல்கள் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பின்னர் நிகழ்நிலை (online) வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்குப் பணம் செலுத்தும்படி ஊக்குவித்து நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது.
இதுமட்டுமன்றி அண்மைக் காலமாகக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும், பிறமிட் திட்டங்களூடாகவும், மரங்களில் முதலீடு எனவும் பாரிய அளவிலான நிதி மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே வடக்கு கிழக்கு மக்கள் இணைய மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Recent Comments