Wednesday, December 3, 2025
Huisஇந்தியாசட்டவிரோதமாக தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது..!

சட்டவிரோதமாக தமிழகம் சென்ற மன்னார் நபர் கைது..!

இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.


சந்தேக நபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!