தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக 62 வயதில் காலமானார்.
நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைத் தீர்த்து வைப்பதில் முன்னோடியாகச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments