திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுண்டிச் சாலைக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்குத் தொடுத்த நகராட்சி மன்றின் சார்பிலும், எதிர் தரப்பான சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர் சார்பிலும் விரிவான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.


Recent Comments