நாடு முழுவதும் உள்ள மருத்துவ அதிகாரிகள் (MOH) பிரிவுகளின் மட்டத்தில் மருத்துவ அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு சிகிச்சை அளிக்கும் ஏராளமான பதிவு செய்யப்படாத நபர்கள் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற் சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
இந்த நபர்களில் பலர் இலங்கை மருத்துவ கவுன்சில் (SLMC) அல்லது ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்களில் பதிவு செய்யப்படாத ஆயுர்வேத மருத்துவர்கள், சுகாதார உதவியாளர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் மருத்துவரல்லாத வாழ்க்கைத் துணைவர்கள், வெளிநாட்டு ஆயுர்வேத முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவக் கல்வி இல்லாதவர்கள் கூட அடங்குவர்.
டாக்டர் சஞ்சீவவின் கூற்றுப்படி, முதலுதவி பணியாளர்கள் மற்றும் தகுதியற்ற நபர்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவ நிலையங்கள் தீவு முழுவதும் பரவலாக இயங்குகின்றன – முக்கிய நகரங்கள் உட்பட. இதுபோன்ற போலி மருத்துவர்களால் பல கருக்கலைப்பு மையங்களும் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் இந்த மையங்களை எளிதாக சோதனை செய்ய முடியும் என்றும், ஆனால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் அரசாங்கம் சில காலமாக தனியார் பயிற்சி ஆய்வுகளை நடத்தாததால் பல அதிகாரிகள் தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். இதன் விளைவாக, போலி மருத்துவ மையங்களுக்கு எதிரான நடவடிக்கை தேக்கமடைந்துள்ளது.
இந்த பதிவு செய்யப்படாத பயிற்சியாளர்களும் அங்கீகரிக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சட்டவிரோத சிகிச்சை முறைகளைப் பயன் படுத்துகிறார்கள் என்றும் டாக்டர் சஞ்சீவ மேலும் குறிப்பிட்டார், இவற்றை SLMC தரநிலைகளின் கீழ் கட்டுப்படுத்த முடியாது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50,000 போலி மருத்துவர்கள் செயற்படக் கூடும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்பு மதிப்பிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்களின் ஒழுங்குமுறை சரிந்து விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.


Recent Comments