கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்றிலிருந்து (27) மறு அறிவிப்பு வரும் வரை பாடசாலைகள் மூடப்படும்.
கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு நேற்று (26) இரவு 9.33 இற்கு இத் தவலை வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments