நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கனமழை மற்றும் வெள்ளப் பேரழிவுகளின் காரணமாக ஏற்பட்ட மரண எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. அபாயப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.


Recent Comments