பாராளுமன்றத்தின் புதிய இணையதளம் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய தளம் மூலம் மக்களுக்கு எம்.பிக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி;
புதிய இணையதளம் நவீன தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
“My Parliament” போர்டல் மூலம் மக்கள் பாராளுமன்றத்துடன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பாராளுமன்றம் வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
அதேசமயம், பாராளுமன்றத்துடன் பணியாற்றும் அரச ஊழியர்களும் தங்களது அதிகார பூர்வ பணிகளை இந்த பதிவு செயல்முறை மூலம் எளிதில் நிறைவேற்றலாம்.
19 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலங்கை பாராளுமன்றத்தின் அதிகார பூர்வ இணையதளம் இந்த புதுப்பிப்பின் மூலம் பல புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Recent Comments