Saturday, January 24, 2026
HuisBreakingபெண் ஒருவர் துஸ்பிரயோகம்; அறுவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்..!

பெண் ஒருவர் துஸ்பிரயோகம்; அறுவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்..!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருளை கொடுத்து 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.

வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் விசாரணைகள் பல விடயங்களை குறித்த பெண் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த பெண் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், காதலன் குறித்த பெண்ணை வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலரையும் குறித்த அறைக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி ஐஸ் குடிக்க வைத்து, மயக்கமடைந்த பிறகு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவற்றை தனது காதலன் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இப் பதிவானது சமூக விளிப்புணர்வுக்காகவே பதிவிடப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!