யாழில் இளம் குடுமப் பெண் ஒருவர் காதலனுடன் தலைமறைவான நிலையில் தாயை பிரிந்து 6வயது மகள் வாடுவதாக கணவன் புலம்பி வருவதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் சங்கானை பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணே மாயமாகியுள்ளார். குறித்த பெண் கடந்த நாற்பது நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாயை காணாது குழந்தை ஏக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுவதுடன், காணாமல் போன மனைவியை கணவர் தீவிரமாக தேடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Recent Comments