அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று 22.12.2025 இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த அனர்த்த பாதிப்புத்தொடர்பான இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பாதிப்புக்களை சீரமைப்புச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேரலையில் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், உபாலி சமரசிங்க, செல்லத்தம்பி திலகநாதன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேன், வடக்கு மாகாண திணைக்கள அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட மட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments