யாழில் கடந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்று சந்தோசமாக இருந்த புதுமணத் தம்பதிகள் தற்போது எலியும் பாம்புமாக மாறியுள்ளார்கள்.
குறித்த மணமகள் தனது மார்பின் நடுப்பகுதியில் குத்திய tattooவே இதற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது.
திருமணமாகி சில நாட்களிலேயே கணவர் இதனை கண்டு பிடித்தள்ளார். அதன் பின்னர் தனது மனைவியை குறித்த tattoo ஏன் குத்தப்பட்டது, யார் மூலமாக குத்தினாய் என கேட்டு தொல்லைப்படுத்தி வந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவியான குறித்த மணமகள் அங்கு கற்கும் போது சில மாணவிகளுடன் சேர்ந்து அழகுகலை நிலையத்தில் குறித்த tattooi வை குத்தியதாக கூறியதுடன் அந்த tattoo பச்சை மயில் தோகையுடன் காணப்படும் அழகிய உருவமாக இன்னுமொரு மாணவியிடம் காணப்பட்டதால் அதனைப் பார்த்தே தானும் அவ்வாறு குத்தியதாக கூறியும் கணவன் சமாதானம் அடையவில்லை எனத் தெரிய வருகின்றது.
மற்றைய மாணவிகளையும் tattoo குத்திய அழகுகலை நிலையத்தையும் தனக்கு காட்டும்படி கூறியதால் கடுப்பான மனைவி கணவனை கண்டபடி ஏசியதுடன் இது தொடர்பாக தனது சமூக வலைத் தளத்திலும் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த கணவன் தற்போது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முற்பட்டுள்ளதுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.


Recent Comments